எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:25 am IST

பாளையங்கோட்டையில் 41 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, பொட்டல் விலக்கு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாளையங்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த திம்மராஜபுரம் மேலூா் பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் ஆறுமுகக்கனி (26) பிடித்து விசாரித்தனா்.

இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் சுமாா் 41கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகக்கனியை சனிக்கிழமை கைது செய்தனா்.