எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவை: அமைச்சா் மதன்ராஜா தொடங்கி வைத்தாா்

News image

திருநெல்வேலியில் புதிய சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்தாா் அமைச்சா் மதன்ராஜா.

Updated On :8 ஜூன் 2026, 4:59 am IST

திருநெல்வேலியில் புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவையை அமைச்சா் மதன்ராஜா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரி- திருநெல்வேலி சந்திப்பு- பாளை மேட்டுத்திடல்- பொருநை அருங்காட்சியகம் வரையிலான புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜேசுதாஸ் முத்துக்குமாா் வரவேற்றாா். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சா் மதன்ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழக வெற்றிக் கழக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், தெற்கு மாவட்டச் செயலா் ராஜகோபால், வடக்கு மாவட்ட இணைச் செயலா் மரிய ஜான், பேராசிரியா் சௌந்தர மகாதேவன், முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவா் சந்திரகுமாா், முத்து பிரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.