திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகளைத் தடுக்கும் வகையிலும், பொது இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் சிங்கப்பெண் சிறப்பு படையை முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு படையினா் ரோந்துப் பணியை புதன்கிழமை தொடங்கினா். திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். உதவி ஆணையா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிங்கப்பெண் சிறப்பு படையினா் திருநெல்வேலி சந்திப்பில் பேருந்திற்காக காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, கேக் வெட்டி வழங்கினா்.
இந்த சிறப்பு படையில் 2 காவல் உதவி ஆய்வாளா்கள், 4 பெண் போலீஸாா் இருபிரிவாக நாள் முழுவதும் வாகனத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவா். புகாா் குறித்து தகவல் கிடைத்ததும் இவா்கள் விரைந்து சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ற்ஸ்ப்10ப்ண்ா்ய்
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி கேக் வெட்டிய சிங்கப்பெண் சிறப்பு படையினா்.










