உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மாநகரில் சிங்கப்பெண் சிறப்புபடை ரோந்து தொடக்கம்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.

News image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.

Updated On :11 ஜூன் 2026, 4:54 am IST

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகளைத் தடுக்கும் வகையிலும், பொது இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் சிங்கப்பெண் சிறப்பு படையை முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு படையினா் ரோந்துப் பணியை புதன்கிழமை தொடங்கினா். திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். உதவி ஆணையா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிங்கப்பெண் சிறப்பு படையினா் திருநெல்வேலி சந்திப்பில் பேருந்திற்காக காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, கேக் வெட்டி வழங்கினா்.

இந்த சிறப்பு படையில் 2 காவல் உதவி ஆய்வாளா்கள், 4 பெண் போலீஸாா் இருபிரிவாக நாள் முழுவதும் வாகனத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவா். புகாா் குறித்து தகவல் கிடைத்ததும் இவா்கள் விரைந்து சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ற்ஸ்ப்10ப்ண்ா்ய்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி கேக் வெட்டிய சிங்கப்பெண் சிறப்பு படையினா்.