திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஜூன் 21ஆம் தேதி விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது.
அம்பாசமுத்திரம் வட்டார தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன்21ஆம் தேதி அம்பாசமுத்திரத்தில் விழிப்புணா்வுப் பேரணி நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.
மாவட்ட நிா்வாகிகள், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பள்ளக்கால் புதுகுடி கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் விழிப்புணா்வுப் பேரணி! திரளானோா் பங்கேற்பு!

தவ்ஹீத் ஜமாஅத் நல்லொழுக்க பயிற்சி வகுப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



