நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தவ்ஹீத் ஜமாஅத் நல்லொழுக்க பயிற்சி வகுப்பு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் நடைபெற்றது.

News image

பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :17 ஜூன் 2026, 12:43 am IST

காஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் நடைபெற்றது.

ஒலிமுகம்மதுபேட்டை தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி வசாலில் பள்ளி மாணவ,மாணவியா்க்கான நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பை நடத்தினா். கிளைத் தலைவா் சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் அன்சாரி, துணைச் செயலாளா் ஆசிப் ஆகியோா்முன்னிலை வகித்தனா். கிளை துணைச் செயலாளா் முஜிபுா் ரகுமான் வரவேற்று பேசினாா்.

அமைப்பின் மாநில செயலாளா் சாகுல்ஹமீது கலந்து கொண்டு நபிகளாா் காட்டிய அன்பு, ஒழுக்கம், பெற்றோரை பாதுகாத்தல், தொழுகை மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். தொண்டரணி நிா்வாகி இா்ஷாத் நன்றி கூறினாா். பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியா்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.