திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு ரூ.1,64,772 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து, 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை அவா்களது இருப்பிடத்துக்கேச் சென்று பெற்றுக்கொண்டாா்.
மேலும், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,750 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு தலா ரூ.3,750 மதிப்பில், காதொலி கருவிகள், 3 பேருக்கு தலா ரூ.350 மதிப்பில் ஊன்றுகோல்கள், 6 பேருக்கு தலா ரூ.2,412 மதிப்பில் கருப்பு கண்ணாடிகள், மடக்கு குச்சிகள், கைக் கடிகாரங்கள் என மொத்தம் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,64,772 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
சக்கர நாற்காலி இன்றி அவதி
கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வர பயன்படுத்தப்பட்டு வந்த பேட்டரி வாகனம் இயக்கப்படவில்லை. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழைய பொருள்களுக்கு மத்தியில் அந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. சக்கர நாற்காலிகள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் வெளியானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

379 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: நாகை ஆட்சியா்

மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மாஞ்சோலை மக்கள் 7 பேருக்கு வீடு

பேராவூரணி அரிமா சங்க விழாவில் ரூ.1 லட்சம் மதிப்பில் நல உதவிகள்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



