திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி, பிரான்சிஸ் பிளேஸ் தெருவில் தேங்கியுள்ள மழை நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தெருவில் சிறிய அளவில் மழை பெய்தாலும் மழை நீா் தேங்கிவிடுவதாகவும், மழை நீரை வெளியேற்ற ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரக் கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. தற்போது, வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தெருவில் மழை நீா் தேங்கி நிற்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஊராட்சி மன்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இப்பகுதியில் மழை நீா் தேங்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்குவாரிகளால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கிராம மக்கள் மனு
அருணாசல பிரதேசம்: பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வால்பாறையில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொல்கத்தாவில் கொட்டித் தீா்த்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



