பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வால்பாறையில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image

வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதியில் முறிந்து விழுந்த மரம்.

Updated On :9 ஜூலை 2026, 3:35 am IST

வால்பாறையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை கடந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. கடந்த மாதம் மழை குறைவாகவே காணப்பட்ட நிலையில், ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதில் வால்பாறையில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை இரவு வரை நீடித்தது. பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. கனமழையால் தேயிலைத் தோட்டங்களில் இலை பறிக்கும் பணி பாதிப்படைந்தது. பல எஸ்டேட்களில் மதியத்துக்கு மேல் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மழைக்குப்பாறை எஸ்டேட் வனத் துறை சோதனைச் சாவடி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் வால்பாறை- சாலக்குடி இடையே சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.