வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி பலி

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:13 am IST

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் (45). மாற்றுத்திறனாளியான இவா், கங்கைகொண்டானுக்கு மூன்று சக்கர மோட்டாா் சைக்கிளில் சம்பவத்தன்று சென்றாராம்.

ஒரு திருப்பத்தில் திடீரென மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்த மகாராஜனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.