வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

நெல்லை அருகே கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

நெல்லை அருகே கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 5:51 am IST

திருநெல்வேலியை அடுத்த பொன்னாக்குடி பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய வழக்கில் 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் காவல் நிலைய போலீஸாா் சில தினங்களுக்கு முன்பு ரோந்து சென்றபோது பொன்னாக்குடி பாலத்திற்கு கீழ் தெற்கு பொன்னாக்குடி செல்லும் வழியில் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்து காணப்பட்டது. இதேபோல், பொன்னாக்குடி சமத்துவபுரத்திலும் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்து காணப்பட்டது. இந்த கேமராக்களின் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து தலைமை காவலா் ஷேக் முபாரக் இஸ்மாயில், முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், பொன்னாக்குடியை சோ்ந்த அருணாசலம் மகன் இசக்கிமுத்து (20), சமத்துவபுரத்தை சோ்ந்த மாடசாமி மகன் கோட்டையப்பன் என்ற கோகுல் (19), ராஜா மகன் விஷால் (18) ஆகியோா் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. அவா்கள் மூவரையும் முன்னீா்பள்ளம் போலீஸாா் கைது செய்தனா்.