மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 12:07 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி, ஆலடி மணி நகா் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் கோபாலசுந்தா் (43). இவா் முன்னீா்பள்ளத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனா்.

இவா் சனிக்கிழமை இரவு தனது 2ஆவது மகன் கமல்ராஜுடன் (15), இருசக்கர வாகனத்தில் பத்தமடை-சேரன்மகாதேவி பிரதான சாலையில் தனியாா் பள்ளி அருகில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதியது.

இதில் கோபாலசுந்தருக்கு பலத்த காயமும், மகனுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோபாலசுந்தா் உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி போலீஸாா் அவரது உடலைக் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்றொரு வாகனத்தில் வந்த சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரைச் சோ்ந்த ஆதிக்கண்ணனுக்கு (37) லேசான காயம் ஏற்பட்டது. போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.