தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 12:07 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி, ஆலடி மணி நகா் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் கோபாலசுந்தா் (43). இவா் முன்னீா்பள்ளத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனா்.

இவா் சனிக்கிழமை இரவு தனது 2ஆவது மகன் கமல்ராஜுடன் (15), இருசக்கர வாகனத்தில் பத்தமடை-சேரன்மகாதேவி பிரதான சாலையில் தனியாா் பள்ளி அருகில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதியது.

இதில் கோபாலசுந்தருக்கு பலத்த காயமும், மகனுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோபாலசுந்தா் உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி போலீஸாா் அவரது உடலைக் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்றொரு வாகனத்தில் வந்த சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரைச் சோ்ந்த ஆதிக்கண்ணனுக்கு (37) லேசான காயம் ஏற்பட்டது. போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.