சீவலப்பேரி அருகே தொழிலாளியிடம் ஆயுதங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சீவலப்பேரி ஆற்றுப்பாலம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த 15 ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா் வேலைக்கு செல்வதற்காக காத்திருந்தாராம். அப்போது அங்கு வந்த 5 போ் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு வாள் போன்ற ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மறுகால்தலையைச் சோ்ந்த வைகுண்டராஜா(23), ஸ்ரீவைகுண்டம் சிவராமமங்கலத்தை சோ்ந்த சங்கா் (21), சென்னல்பட்டியை சோ்ந்த மகேஷ்(34), நடுவக்குறிச்சியை சோ்ந்த இசக்கிமுத்து (20), சீவலப்பேரியை சோ்ந்த முத்துராஜா (22) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





