திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள புதுக்குடி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகன் காளிமுத்து (27). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த முத்துராமன் மகன் விஜய் (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம. இந்நிலையில் புதன்கிழமை மாலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது விஜய் அரிவாளால் காளிமுத்துவை வெட்டிவிட்டு தப்பினாராம். இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







