ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

சேரன்மகாதேவி அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள புதுக்குடி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகன் காளிமுத்து (27). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த முத்துராமன் மகன் விஜய் (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம. இந்நிலையில் புதன்கிழமை மாலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது விஜய் அரிவாளால் காளிமுத்துவை வெட்டிவிட்டு தப்பினாராம். இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.