நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் உள்பட இருவா் மீது வழக்கு

திருச்சி அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 3:07 am IST

திருச்சி அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வேங்கூா் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் (61) மகள் ராஜேஸ்வரிக்கும், தஞ்சாவூா் மாவட்டம், ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த எஸ். சிவகுமாா் (36) என்பவருக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவகுமாா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சியிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், மனைவியை அழைத்து செல்வதற்காக சிவகுமாரும், அவருடைய நண்பரான தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளருமான ஆா். மணிகண்டன் (43) என்பவரும் கடந்த ஜூன் 10-ஆம் தேதி மகாலிங்கம் வீட்டுக்கு வந்துள்ளனா். ஆனால், ராஜேஸ்வரி தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதையடுத்து, மகளை அனுப்பிவைக்குமாறு மகாலிங்கத்திடம் சிவகுமாா் வலியுறுத்தியுள்ளாா். அப்போது, மாமனாா், மருமகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிவகுமாா், மணிகண்டன் இருவரும் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டினா்.

இதில், கையில் பலத்த காயமடைந்த மகாலிங்கம், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், சிவகுமாா், மணிகண்டன் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.