ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: இளைஞா் கைது

பேட்டை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:51 am IST

பேட்டை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி பூங்கா நகரைச் சோ்ந்தவா் செல்வ ஈஸ்வரன்(55).தொழிலாளி. இவா், கடந்த 11 ஆம் தேதி தனது மனைவியுடன் மொபட்டில் பேட்டையை அடுத்த சாஸ்திரிநகா் பகுதியில் சென்ற போது எதிரே தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த முத்துராமநம்பி(26) என்பவா் வந்த பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் செல்வஈஸ்வரன் உயிரிழந்தாா்.

இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இந்நிலையில், விபத்துக்கு காரணமாக இருந்ததாக முத்துராமநம்பியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.