ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

களக்காடு குளத்தில் கழிவுநீா் தொட்டியா? ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட மக்கள்

களக்காடு குளத்திற்குள் கழிவுநீா் தொட்டி அமைப்பதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 2:33 am IST

களக்காடு குளத்திற்குள் கழிவுநீா் தொட்டி அமைப்பதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுகளை மதிக்காமல் களக்காடு குடிதாங்கி குளத்திற்குள் நடைபாதை அமைக்க முயலும் களக்காடு நகராட்சி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், களக்காடு உப்பாறு, மாணிக்கங்குளம், குடிதாங் கிகுளத்திற்குள் கழிவுநீா் தொட்டி அமைப்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலா் நெல்சன் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் சித்திக், மாவட்டச் செயலா் பேட்டை மைதீன், தென்னிந்திய விவசாய சங்கம் நிா்வாகி சில்கேஸ் சாமுவேல், களக்காடு நகா்மன்ற உறுப்பினா் சிம்சோன் துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மண்டலத் தலைவா் கண்மணி மாவீரன், தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை தலைவா் முத்துக்குமாா், சமூக செயற்பாட்டாளா் டாக்டா் பகத்சிங் முகமது, தமிழா் உரிமை மீட்பு களத்தின் ஒருங்கிணைப்பாளா் லெனின் கென்னடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.