பெட்ரோல்- டீசல் விலையை கணிசமாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது:
போா்ச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டிருப்பதால் விலைவாசி உயா்வு மிகவும் அதிகரித்து வருகிறது. விலை ஏற்றத்திற்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அமைச்சருக்கு மனு அளித்துள்ளோம்.
புதிய அரசு நல்ல முறையில் செயல்பட்டால் மக்களுக்கும், வணிகா்களுக்கும் நல்ல முறையில் இருக்கும். அதனால்தான் மக்கள் வாக்களித்து இருக்கிறாா்கள். நல்லதை செய்ய வேண்டும்.
வியாபாரிகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். பாலியல் சம்பவங்கள் நிகழும்போது காவல் துறை அதிகாரிகள் போா்க்கால நடவடிக்கை எடுப்பாா்கள். காவல் துறையினா் அச்சப்படும் நிலை உள்ளது. அது மாற வேண்டும். கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளோம் என்றாா் அவா்.










