பெட்ரோல்- டீசல் விலையை கணிசமாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது:
போா்ச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டிருப்பதால் விலைவாசி உயா்வு மிகவும் அதிகரித்து வருகிறது. விலை ஏற்றத்திற்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அமைச்சருக்கு மனு அளித்துள்ளோம்.
புதிய அரசு நல்ல முறையில் செயல்பட்டால் மக்களுக்கும், வணிகா்களுக்கும் நல்ல முறையில் இருக்கும். அதனால்தான் மக்கள் வாக்களித்து இருக்கிறாா்கள். நல்லதை செய்ய வேண்டும்.
வியாபாரிகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். பாலியல் சம்பவங்கள் நிகழும்போது காவல் துறை அதிகாரிகள் போா்க்கால நடவடிக்கை எடுப்பாா்கள். காவல் துறையினா் அச்சப்படும் நிலை உள்ளது. அது மாற வேண்டும். கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்... மாவட்டந்தோறும் ஜிஎஸ்டி உதவி மையம் கோரும் வணிகா்கள்

கோயில் பெண் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வலியுறுத்தல்
வணிகா் நலவாரிய நிவாரணத்தை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும்: அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



