திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சொத்து தகராறில் தம்பி காருக்கு தீ வைத்ததாக சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் முத்துக்குமாா் (35). காா் ஓட்டுநரான இவருக்கும், இவரது சகோதரா் பாபநாசபெருமாளுக்குமிடைய நீண்ட காலமாக சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே புதன்கிழமை, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் அன்றைய தினம் இரவில், முத்துக்குமாரின் காருக்கு பாபநாசபெருமாள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து பாபநாசபெருமாளை வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிலத் தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது
மேச்சேரி அருகே விவசாயிக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

சொத்து தகராறில் தம்பி கொலை: அண்ணன் கைது
மானூா் அருகே காருக்கு தீ வைப்பு: தந்தை, மகன் கைது
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan


