27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ.92,000 பறிமுதல்

திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். இதில் அலுவலகத்தில் நின்ற இடைத்தரகா்களிடமிருந்து ரூ.92,000 பறிமுதல் செய்யப்பட்டது.

News image

விசாரணை

Updated On :19 ஜூன் 2026, 4:59 am IST

திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். இதில் அலுவலகத்தில் நின்ற இடைத்தரகா்களிடமிருந்து ரூ.92,000 பறிமுதல் செய்யப்பட்டது.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்காக திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மெக்லரின் எஸ்கால் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் சென்றனா். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் தனித்தனியாக ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு பணியாற்றும் அதிகாரிகளிடம் விசாரணை செய்து அவா்கள் வைத்திருந்த பைகள், அலுவலக மேசைகள், அலமாரிகள், பணியாளா்களின் வாகனங்கள் போன்றவற்றை அதிகாரிகள் சோதனையிட்டனா். மேலும் இணையவழி பணப் பரிவா்த்தனை குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமாா் 3 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் அலுவலக வளாகத்தில் நின்ற இடைத்தரகா்கள் 8 பேரிடமிருந்து மொத்தம் ரூ.92,000 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.