முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் சுப முகூா்த்த நாள்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப் பதிவுகள் நடப்பது வழக்கம்.

இதைக் கருத்தில் கொண்டு 100 டோக்கன்கள் வழங்கப்படும் சாா் பதிவகங்களில் 150 டோக்கன்கள் முதல் 300 டோக்கன்கள் வரை வழங்கப்படும்.

இந்நிலையில் உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இவா்கள் காலை முதல் பதிவான பத்திரங்களை ஆய்வு செய்தனா். இதன் பின்னா் ஒவ்வொரு அறையாக சென்று முக்கிய ஆவணங்களை சோதனை செய்தனா். இந்த சோதனை தொடா்ந்து இரவு வரை நீடித்தது.

குறிப்பாக ஆவணங்கள் சரியாக இருக்கின்றனவா, முறைகேடு ஏதாவது நடந்துள்ளதா என ஆய்வில் ஈடுபட்டதுடன் சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி 10-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த திடீா் சோதனையால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.