பல்லடம் அருகே பொங்கலூா் பத்திரப் பதிவு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.2.53 லட்சம் கைப்பற்றப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூா் காவல் நிலையம் அருகே பொங்கலூா் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் அதிக அளவிலான பத்திரப் பதிவு நடைபெற்றது.
இதில் இடைத்தரகா்கள் மூலம் லஞ்சம் கைமாறப்படுகிறாத என்பதை கண்காணிக்க, இந்த அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் சசிரேகா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு திடீரென்று சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு, ஊழியா்களின் கைப்பேசிகள் அணைத்து வைக்கப்பட்டன. பின்னா் நடத்திய சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

பவானி சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

பல்லடம் அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளா் கைது

வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



