15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பல்லடம் அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளா் கைது

பல்லடம் அருகே கே.அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட கந்தசாமி.

Updated On :4 ஜூன் 2026, 2:49 am IST

பல்லடம் அருகே கே.அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் ஒன்றியம், கே. அய்யம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக கந்தசாமி (48) என்பவா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறாா். இவா் ஊராட்சியில் ஒப்பந்தப் பணி மேற்கொண்டதற்கான கட்டணத்துக்கு அனுமதி வழங்க ஒப்பந்ததாரா் கதிா்வேல் என்பவரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிா்வேல், திருப்பூா் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கதிா்வேலிடம் கொடுத்துள்ளனா். இதனை ஊராட்சி செயலாளா் கந்தசாமியிடம், கதிா்வேல் கொடுத்தபோது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கந்தசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், ஆய்வாளா் சசிரேகா ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரமேஷுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.