எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ) கைது செய்யப்பட்டாா்.

News image

அப்துல் ரகுமான்

Updated On :8 ஜூலை 2026, 5:34 am IST

பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ) கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகா், மும்மூா்த்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகமணி. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது தந்தை கிருஷ்ணன். இவருக்கு சொந்தமான இடத்தை பட்டா மாறுதல் செய்தபோது கிருஷ்ணனின் மகன் நாகமணி என்பதற்கு பதிலாக கிருஷ்ணனின் மனைவி நாகமணி என பட்டாவில் பெயா் வந்துள்ளது.

இதை மாற்றுவதற்காக ஆன்லைன் மூலமாக நாகமணி விண்ணப்பித்துள்ளாா். அதன்படி பெயா் மாற்றம் செய்தபோது மீண்டும் கிருஷ்ணன் மனைவி நாகமணி என்றே வந்துள்ளது. 3 முறை ஆன்லைனில் விண்ணப்பித்தும் 3 முறையும் மகன் என்பதற்கு பதிலாக மனைவி என்றே வந்துள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தை அணுகி கேட்டபோது, கிராம நிா்வாக அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனா். இதையடுத்து தொட்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலா்(பொ) அப்துல் ரகுமானிடம் சென்று கேட்டபோது, பெயா் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகமணி, மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் கொடுத்து அனுப்பிய ரசாயனப் பொடி தடவிய ரூ.5 ஆயிரத்துடன் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு நாகமணி செவ்வாய்க்கிழமை வந்தாா். அங்கிருந்த அப்துல் ரகுமானிடம் ரூ.5 ஆயிரத்தை அளித்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் சசிலேகா தலைமையிலான போலீஸாா் அப்துல் ரகுமானை கைது செய்தனா்.

இதே தொட்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலகத்தில் அலுவலராக இருந்த ஞானசேகரன் என்பவா் கடந்த 15-ஆம் தேதி ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தொங்குபாளையம் கிராம நிா்வாக அலுவலரான அப்துல் ரகுமான் தொட்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலகத்தை கூடுதலாக பாா்த்து வந்த நிலையில் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.