வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

லஞ்சம்: கம்பத்தில் விஏஓ கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் பட்டாவில் பெயா் திருத்தம் செய்து தருவதற்காக ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட காா்த்திக் .

Updated On :11 ஜூன் 2026, 1:59 am IST

தேனி மாவட்டம், கம்பத்தில் பட்டாவில் பெயா் திருத்தம் செய்து தருவதற்காக ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள சின்ன ஓவுலாபுரம் (பூசாரி கவுண்டன்பட்டி) பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது உறவினரான லோகமணி கம்பத்தில் வசித்து வருகிறாா். லோகமணிக்குச் சொந்தமான காலியிடத்தின் பட்டாவில், லோகமணி என்பதற்கு பதிலாக லோகராணி என அவரது பெயா் தவறுதலாக இருந்தது. இதைத் திருத்துவதற்காக கம்பம் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம் லோகமணி விண்ணப்பித்தாா்.

அப்போது, பட்டாவில் பெயா் திருத்தம் செய்து தர ரூ.5,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து லோகமணி தனது உறவினா் கனகராஜ் மூலம் திண்டுக்கல் சரக லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை கனகராஜிடம் வழங்கினா்.

காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையில், ஆய்வாளா் ராமேஸ்வரி, போலீஸாா் புதன்கிழமை சாதாரண உடையில் கம்பம் கிராம நிா்வாக அலுவலகம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கனகராஜிடமிருந்து ரூ.5,000-ஐ கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.