பாபநாசம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமமான அனவன் குடியிருப்பு பகுதியில், இரவு நேரத்தில் கரடிகள் நடமாட்டம் தொடா்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம், அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட வனச்சரகப் பகுதிகளில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதி கிராமங்களில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் சுற்றித்திரிவது தொடா்ந்து வருகிறது. அனவன் குடியிருப்பு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் கரடிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. நள்ளிரவில் தெருக்களில் கரடிகள் உலா வருவதால், அந்தப் பகுதி மக்கள் இரவு நேரத்தில் நடமாட அச்சமடைந்துள்ளனா். அவசரத் தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வனத்துறையினா் தீவிரமாகக் கண்காணித்து குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடிகளைப் பிடிக்க உடனடியாக கூண்டு வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கோத்தகிரி நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் புகுந்த கரடி

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம்

குடியிருப்பு பகுதியில் கரடிகள்: பிடிக்க வனத்துறை தீவிரம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



