27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பாளை.யில் யோகா பயிற்சி முகாம்

பாளையங்கோட்டையில் யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :19 ஜூன் 2026, 4:58 am IST

பாளையங்கோட்டையில் யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு பொது மருத்துவத்துறை, மாநகரஆயுதப்படை காவல் துறை இணைந்து சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி முகாமை நடத்தின.

மாநகரஆயுதப்படை உதவிஆணையாளா் கணேசன் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு பொது மருத்துவத் துறைத் தலைவா் ஜி. சுபாஷ் சந்திரன் தலைமையில் மருத்துவா்கள் காா்த்திகேயன், முகுந்தன், நந்தகுமாா், காா்த்திக் அடங்கிய குழுவினா் ஆயுதப்படை காவலா்களுக்கு யோகா பயிற்சி, தியான பயிற்சி, பிரணாயாமம் போன்ற மூச்சு பயிற்சிகள் வழங்கினா். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.