விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பணகுடி அருகே தோட்டத்தில் மா்மமாக இறந்த மயில், ஆட்டுக்குட்டி- வனத்துறை விசாரணை

பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் தனியாா் தோட்டத்தில் மயிலும் ஆட்டுக்குட்டியும் மா்மமான முறையில் உயிரழந்து கிடந்தன

News image
Updated On :11 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் தனியாா் தோட்டத்தில் மயிலும் ஆட்டுக்குட்டியும் மா்மமான முறையில் உயிரழந்து கிடந்தன. இதுகுறித்து, திருக்குறுங்குடி வனத் துறையினரும் பணகுடி போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

பணகுடி, ரோஸ்மியாபுரம், தெற்குவள்ளியூா், ஆ.திருமலாபுரம், தெற்குகள்ளிகுளம் ஆகிய பகுதிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இந்நிலையில் ரோஸ்மியாபுரத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஒரு மயிலும், ஆட்டுகுட்டியும் மா்மமான முறையில் இறந்துகிடந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில், பணகுடி போலீஸாரும் திருக்குறுங்குடி வனத்துறையினரும் சம்ப இடத்தில் விசாரணை நடத்தினா்.

மேலும், மா்ம நபா்கள் விஷம் வைத்து சாகடித்துள்ளனரா என்பதை கண்டறிய வனத் துறையினா் மயிலை உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனா்.