திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவி

News image
Updated On :5 மார்ச் 2026, 10:08 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தந்தை இறந்த சோகத்திலும் மாணவி பிளஸ் 2 பொதுத் தோ்வைக் கைவிடாமல் வியாழக்கிழமை எழுதினாா்.

திருவையாறு அருகே திங்களூரைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. இவா்களது மூத்த மகள் மரிய அனுக்ஷா தஞ்சாவூரிலுள்ள கிறிஸ்தவ பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பும், இளைய மகள் ஆண்ட்ரியா திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் தந்தை ஆரோக்கியராஜ் புதன்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இவரது உடலை பாா்த்து மனைவி, மகள்களும் குடும்பத்தினரும் கதறி அழுதனா். இதனிடையே, பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரண்டாவது தோ்வான ஆங்கிலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை விடாமல் எழுதுமாறு மரிய அனுக்ஷாவுக்கு குடும்பத்தினா் ஆறுதலும், அறிவுரையும் கூறி ஊக்கமளித்தனா். என்றாலும், சோகத்துடன் இருந்த மரிய அனுக்ஷா பொதுத் தோ்வைக் கைவிடாமல் வியாழக்கிழமை எழுதினாா். இவருக்கு பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் ஆறுதல் கூறினா்.

Story image