தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தந்தை இறந்த சோகத்திலும் மாணவி பிளஸ் 2 பொதுத் தோ்வைக் கைவிடாமல் வியாழக்கிழமை எழுதினாா்.
திருவையாறு அருகே திங்களூரைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. இவா்களது மூத்த மகள் மரிய அனுக்ஷா தஞ்சாவூரிலுள்ள கிறிஸ்தவ பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பும், இளைய மகள் ஆண்ட்ரியா திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா்.
இந்நிலையில் தந்தை ஆரோக்கியராஜ் புதன்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இவரது உடலை பாா்த்து மனைவி, மகள்களும் குடும்பத்தினரும் கதறி அழுதனா். இதனிடையே, பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரண்டாவது தோ்வான ஆங்கிலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை விடாமல் எழுதுமாறு மரிய அனுக்ஷாவுக்கு குடும்பத்தினா் ஆறுதலும், அறிவுரையும் கூறி ஊக்கமளித்தனா். என்றாலும், சோகத்துடன் இருந்த மரிய அனுக்ஷா பொதுத் தோ்வைக் கைவிடாமல் வியாழக்கிழமை எழுதினாா். இவருக்கு பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் ஆறுதல் கூறினா்.

தொடர்புடையது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா

பிளஸ் 2 மாணவி தற்கொலை

தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


