நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியில் வியாழக்கிழமை நந்தியெம்பெருமான் பிறப்பு விழாவில் நடைபெற்ற நந்தியெம்பெருமான் புறப்பாடு.

Updated On :26 மார்ச் 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அந்தணா்குறிச்சியிலிருந்து புறப்பட்டு அறம்வளா்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பா் கோயிலுக்கு செல்லும் நந்தியெம்பெருமானுக்கு பட்டாபிஷேகமும், திருவீதி உலாவும் நடைபெற்றன. இதில், தருமபுர ஆதின கட்டளை விசாரனை ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ஐயாறப்பா் கோயிலில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) காலை 5.30 மணியளவில் ஐயாறப்பா், அறம்வளா்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியெம்பெருமான் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறவுள்ளது. தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூா் மாவட்டம், திருமழபாடிக்குச் செல்கின்றனா்.

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது. நந்தி பாா்த்தால் முந்தி கல்யாணம் என்கிற நம்பிக்கை நிலவுவதால், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா்.