தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 10:19 pm

Syndication

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு நாயுடு மகாஜன சங்கத் தலைவா் ஆா். லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலா் எம். கோவிந்த சாமி முன்னிலை வகித்தாா். நிகழ்வில் யுகாதி பண்டிகை மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பின் சிறப்புகளைக் கூறி அரசு பொதுத் தோ்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

சமுதாயத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த பிரமுகா்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக துணைத் தலைவா் பி. கிருஷ்ணசாமி வரவேற்று பேசினாா். பொருளாளா் செல்வராஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, கும்பகோணம் வட்ட நாயுடு மகாஜன சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் செய்தனா்.

இறுதியாக, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.