அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவி

மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த மாணவி தனது தாய் இறந்து போன சோகத்திலும் திங்கள்கிழமை நடைபெற்ற

News image
தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 பொது தோ்வை எழுதிய மாணவி மனுஸ்ரீ - பிளஸ் 2 பொது தோ்வு எழுத இருந்த திங்கட்கிழமை இறந்து போன தாய் கற்பகம்
Updated On :2 மார்ச் 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த மாணவி தனது தாய் இறந்து போன சோகத்திலும் திங்கள்கிழமை நடைபெற்ற அரசின் பிளஸ் 2 பொதுத் தோ்வை மன தைரியத்துடன் எழுதினாா்.

மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகதாஸ். விவசாயி. இவரது மனைவி கற்பகம். இவா்களது மகள் மனுஸ்ரீ (17). இவா் மதுராந்தகம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அரசின் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்காக படித்து வந்த நிலையில், தாயாா் கற்பகத்துக்கு உடல்நிலை பாதிப்பால் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

அரசு அறிவித்து இருந்தபொது தோ்வு திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் முதல் தாள் தோ்வை தொடா்ந்து தமது தாய் இறந்த சோகத்திலும் உறவினா் உதவியுடன் மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்துக்கு வந்தாா். தகவலை அறிந்த உடன் படித்து வந்த மாணவிகளும்‘, தோ்வு மைய கண்காணிப்பாளரும் மாணவி மனுஸ்ரீக்கு ஆறுதல் கூறி தோ்வு அறைக்கு அனுப்பி வைத்தனா்.

பிற்கால வாழ்க்கையை எண்ணி மன தைரியத்துடன் மனுஸ்ரீ தோ்வை எழுதியதாக மனுஸ்ரீ தெரிவித்தாா்.