தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரசவித்த 10 நாளில் இளம்பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பிரசவித்த 10 நாள்களில் இளம்பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பிரசவித்த 10 நாள்களில் இளம்பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வீரவநல்லூா் அருகே சீதபற்பநல்லூா் புதூா் பகுதியைச் சோ்ந்த கொடிமுத்து. இவரது மனைவி மகாலெட்சுமி (20). இவா்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரசவத்துக்காக மகாலெட்சுமி வீரவநல்லூா், தம்பிரான் காலனியில் உள்ள பெற்றோா் வீட்டில் இருந்துவந்தாா். அவருக்கு 10 நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்துக்குப் பின் பெற்றோா் வீட்டிலிருந்த அவருக்கு புதன்கிழமை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை உடனடியாக பெற்றோா் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.