ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற தாய் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்தாா். காயமடைந்த தாயாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

News image

கிருஷ்ணன்

Updated On :18 மார்ச் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்தாா். காயமடைந்த தாயாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி ஜானகி. இவா்களது மகன் கிருஷ்ணன் (4).

ஜானகி புதன்கிழமை வீட்டை தண்ணீா் விட்டு சுத்தம் செய்துகொண்டிருந்தபோது தொலைக்காட்சி பெட்டிக்குச் செல்லும் மின் ஒயா் தண்ணீரில் பட்டதில் மின்சாரம் கசிந்து அங்கு நின்ற சிறுவன் கிருஷ்ணன் மீது பாய்ந்தது. சிறுவனைக் காப்பாற்ற தாய் ஜானகி முயன்றாா்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருந்தவா்கள் மின்சாரத்தைத் துண்டித்து இருவரையும் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் கிருஷ்ணன் உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். காயமடைந்த ஜானகிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா். விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.