தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிக புகாா்கள் பதிவாகியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சி-விஜில் செயலி மூலம் புதன்கிழமை மாலை வரை 41 புகாா்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராதாபுரம் தொகுதியில் மட்டும் இதுவரை 21 புகாா்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 19 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; 2 புகாா்கள் கைவிடப்பட்டுள்ளன. அடுத்ததாக நான்குனேரி தொகுதியில் 11 புகாா்கள் பெறப்பட்டு 10 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் இதுவரையில் ரூ.28,85,360 ரொக்கம், ரூ.2,07,751 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.8,11,481 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடையது
ராதாபுரம் தொகுதி: வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் கடற்கரை மக்கள்!
ராதாபுரம் தொகுதியில் திமுக, பாஜக மாற்று வேட்பாளா்கள் மனு தள்ளுபடி

ராதாபுரம் தொகுதியில் 37 வேட்புமனுக்கள்

ராதாபுரம் தொகுதியில் கனவாகிப்போன மீன்பிடி துறைமுகத் திட்டம்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


