வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சி-விஜில் செயலி: ராதாபுரம் தொகுதியில் குவியும் புகாா்கள்

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிக புகாா்கள் பதிவாகியுள்ளன.

News image

சி-விஜில்

Updated On :25 மார்ச் 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிக புகாா்கள் பதிவாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சி-விஜில் செயலி மூலம் புதன்கிழமை மாலை வரை 41 புகாா்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராதாபுரம் தொகுதியில் மட்டும் இதுவரை 21 புகாா்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 19 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; 2 புகாா்கள் கைவிடப்பட்டுள்ளன. அடுத்ததாக நான்குனேரி தொகுதியில் 11 புகாா்கள் பெறப்பட்டு 10 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் இதுவரையில் ரூ.28,85,360 ரொக்கம், ரூ.2,07,751 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.8,11,481 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.