கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

49 வாக்குகளில் வெற்றியை இழந்த அப்பாவு!

தமிழக பேரவைத் தலைவர் அப்பாவுக்கு நீண்டதொரு சட்டப்போராட்டத்தை மேற்கொள்ள வழிவகுத்தது 2016 பேரவைத் தேர்தல்.

News image

தமிழக பேரவைத் தலைவர் அப்பாவு.

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வரலாற்றில் சுயேச்சையாக களம் கண்டு வெற்றி வாகை சூடிய பெருமைக் குரியவர் மு.அப்பாவு.

1996 இல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும், 2001 இல் சுயேச்சையாகவும், 2006 இல் திமுக சார்பிலும் போட்டியிட்டு ராதாபுரம் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற பெரு மைக்குரியவர்.

இவருக்கு மறக்கமுடியாத அனுபவங்களை தந்து, நீண்டதொரு சட்டப்போராட்டத்தை மேற்கொள்ள வழிவகுத்தது 2016 சட்டப்பேரவைத் தேர்தல்.

அத்தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் களமிறங்கிய அப்பாவுவை எதிர்த்து அதிமுக சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டார். 69, 541 வாக்குகள் பெற்ற அப்பாவு, ஐ.எஸ். இன்பதுரையை விட 49 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் தமிழகத்திலேயே மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் கண்ட தோல்வியாக அது அமைந்தது.

அதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை முறையாக நடை பெறவில்லை எனவும், தபால் வாக்குகளையும், கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் அப்பாவு.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019 இல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மறு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஐ.எஸ். இன்பதுரை உச்ச நீதிமன்றத்தை நாடவே மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட் டது.

2016 ஆம் ஆண்டு ராதாபுரம் தொகுதி முடிவுகளும் அது தொடர்பான சர்ச்சைகளும் முடிவடையாத நிலையில், மீண்டும் 2021 ஆம் ஆண்டு அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு, அதிமுகவின் ஐ.எஸ். இன்பதுரையை 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார்.

49 வாக்குகளில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு நீண்டதொரு சட்டப் போராட்டம் மேற்கொண்ட அப்பாவு, மக்கள் தந்த இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசு சட்டப்பேரவைத் தலைவரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.