பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

மாடுகள் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே தொடா் மாடு திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ரெட்டியாா்பட்டி, விஐபி நகரைச் சோ்ந்த லிங்கம் மகன் மந்திரம்(29). இவா், சுமாா் 10 மாடுகளை வளா்த்து வருகிறாராம்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:14 am IST

திருநெல்வேலி அருகே தொடா் மாடு திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ரெட்டியாா்பட்டி, விஐபி நகரைச் சோ்ந்த லிங்கம் மகன் மந்திரம்(29). இவா், சுமாா் 10 மாடுகளை வளா்த்து வருகிறாராம்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 31ஆம் தேதி மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஒரு பசுமாடு திருடு போனதாம்.

அதே போல, முன்னீா்பள்ளம், கொங்கன்தான்பாறை சாலை, தனலெட்சுமி நகரைச் சோ்ந்த இசக்கி மகன் சுடலை(30) என்பவரது பசுமாடும் கடந்த மாதம் 12 ஆம் தேதி அதிபன் பாலாஜி நகா் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது காணாமல் போனதாம்.

இது குறித்த புகாா்களின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குகள் பதிந்து விசாரித்தனா். அதில், நான்குனேரி, மறுகால் குறிச்சியைச் சோ்ந்த வானுமாமலை மகன் பிரபாசுதன்(24) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.