/
மானூரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
மானூா் அருகேயுள்ள அயூப்கான்புரத்தைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் பரமசிவன் (67). விவசாயியான இவா், தனது மொபைட்டிற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டாராம். அப்போது திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற காரும், மொபைட்டும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பரமசிவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
தொடர்புடையது

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

பாளை.யில் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



