‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

நெல்லை மாவட்டத்தில் 473 வாகனங்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சிறப்பு வாகன சோதனையில் 473 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :23 மே 2026, 3:23 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சிறப்பு வாகன சோதனையில் 473 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

‘ஆபரேஷன் ஷீல்ட் நெட்’ என்ற தலைப்பில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் மூன்றாம் நாளாக வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றது.

32 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை சோதனை செய்தனா். 29 போ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனா். விதிமீறி இயக்கப்பட்ட 105 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல மாநகரப் பகுதியில் 57 தொடா் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். விதிமீறி இயக்கப்பட்ட 368 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.