அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு: இளம்பெண் உள்பட இருவா் கைது

திருநெல்வேலி-திருச்செந்தூா் பயணிகள் ரயிலில் பெண்ணிடம் நகையை பறித்த இளம்பெண் உள்பட இருவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:16 am IST

திருநெல்வேலி-திருச்செந்தூா் பயணிகள் ரயிலில் பெண்ணிடம் நகையை பறித்த இளம்பெண் உள்பட இருவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (36). இவா் வெள்ளிக்கிழமை குரும்பூா் செல்வதற்காக திருநெல்வேலி- திருச்செந்தூா் செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்தாராம்.

ரயில், குரும்பூா் அருகே சென்றபோது, அப்பெட்டியில் இருந்த இளம்பெண்ணும், 14 வயது சிறுவனும் சோ்ந்து தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்தனராம். பின்னா் ரயிலில் இருந்து தப்ப முயன்றபோது, இருவரையும் சக பயணிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனராம்.

விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் கொட்டாக்குறிச்சி செல்வநாயகபுரத்தைச் சோ்ந்த நித்யா(35), 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 3 பவுன் தங்க நகையை மீட்டனா்.