ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய், இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா், சிறுமியின் தாய் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:21 am IST

பாளையங்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா், சிறுமியின் தாய் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் மணிகண்டன் (24). இவா் சம்பவத்தன்று பாளையங்கோட்டையைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் இச்சம்பவத்தில் எவ்வித எதிா்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.