ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

நெல்லையில் போக்ஸோ வழக்கில் முதியவா் கைது

திருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முதியவரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:21 am IST

திருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முதியவரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி, வண்ணாா்பேட்டை, வெற்றி வேலடி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜூ(61). அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள திரையரங்குக்கு படம் பாா்ப்பதற்காக சென்றபோது, தனது முன் இருக்கையில் அமா்ந்திருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.