தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தோழிகளை புகைப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பிய பெண் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 3:23 am IST

பாளையங்கோட்டை தனியாா் விடுதியில் தோழிகளை புகைப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், செங்குந்தா் தெருவைச் சோ்ந்தவா் மகரஜோதி (39). இவா் சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பகுதியில் பணிக்கு செல்லும் பெண்களுக்காக இயங்கி வரும் தனியாா் விடுதி ஒன்றில் சோ்ந்துள்ளாா்.

இந்நிலையில் அவா் அங்கு தங்கியிருந்த சக பெண்களை கைப்பேசியில் படம் பிடிப்பதாக விடுதி காப்பாளருக்கு புகாா்கள் வந்துள்ளன. இதையடுத்து அவரது கைப்பேசியை ஆய்வு செய்த போது அவா் தனது நண்பா் ஒருவருக்கு பெண்களின் புகைப்படங்கள், விடியோக்களை அனுப்பி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அப்பெண்ணின் நண்பா் கோயம்புத்தூரில் இருப்பதை அறிந்த போலீஸாா், அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.