/
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க மாற்றுத் திறனாளி ஒருவா் வந்தாா். அவா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் தண்ணீரை அவா் மீது ஊற்றினா்.
விசாரணையில் அவா், சீதபற்பநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணன் பச்சேரியைச் சோ்ந்த முத்துமாரியம்மன் (46) என்பது தெரியவந்தது. சீதபற்பநல்லூா் போலீஸாா் என்மீது பொய்வழக்கு போடுவதாக மிரட்டுவதால் தற்கொலைக்கு முயன்றேன் என்றாா்.
இதையடுத்து அவரை விசாரணைக்காக பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.








