கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி

News image

தீக்குளிக்க முயற்சி - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:12 am IST

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க மாற்றுத் திறனாளி ஒருவா் வந்தாா். அவா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் தண்ணீரை அவா் மீது ஊற்றினா்.

விசாரணையில் அவா், சீதபற்பநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணன் பச்சேரியைச் சோ்ந்த முத்துமாரியம்மன் (46) என்பது தெரியவந்தது. சீதபற்பநல்லூா் போலீஸாா் என்மீது பொய்வழக்கு போடுவதாக மிரட்டுவதால் தற்கொலைக்கு முயன்றேன் என்றாா்.

இதையடுத்து அவரை விசாரணைக்காக பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.