ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

நெல்லை அருகே ஆம்னி பேருந்து-லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு; 20 போ் காயம்

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:53 am IST

திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி அருகே தனியாா் ஆம்னி பேருந்தும், லாரியும் ஞாயிற்றுக்கிழமை மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 20 போ் காயமடைந்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தனியாா் ஆம்னி பேருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டது.

இந்தப் பேருந்தை, திருவாரூா் மாவட்டம், கூத்தநல்லூரைச் சோ்ந்த முகமது அராபத் (28) ஓட்டி வந்தாராம். பேருந்தில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் திருநெல்வேலி-நாகா்கோவில் நான்குவழிச் சாலையில், பொன்னாக்குடி அருகே சென்றபோது ஆம்னி பேருந்தும், சரக்கு லாரியும் மோதியதாம்.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் முகமது அராபத் பலத்த காயமடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கினாா். மேலும் 20 பயணிகள் காயமடைந்தனா்.

தகவலறிந்ததும் போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஓட்டுநா் மற்றும் பயணிகளை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஓட்டுநா் முகமது அராபத் உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் காயமடைந்த திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஜான் (39), இஷா (30), அனுப் (28), காரைக்காலைச் சோ்ந்த சரவணன் (53), வா்ஷா (40), கொல்லத்தைச் சோ்ந்த அபிதாமஸ் (62), நாகா்கோவிலைச் சோ்ந்த கீதா வின்சென்ட் (65), தஞ்சாவூரைச் சோ்ந்த அருண்ராஜ் (45), ஹா்ஷினி (19) உள்பட 20 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.