
சாலை, தெருவிளக்கு வசதி கோரி மாநகராட்சியில் மனு
சாலை, தெருவிளக்கு வசதி செய்துதரக் கோரி திருநெல்வேலி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த பொதுமக்கள்.
சாலை, தெருவிளக்கு வசதி செய்துதரக் கோரி திருநெல்வேலி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையா்கள் யுகமணி, பாலசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்து மனுக்கள் பெற்றனா்.
32 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அனுராதா தலைமையில் அளித்த மனு: 32 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாளையங்கோட்டை செயின்ட் பால்ஸ் நகரில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறாா்கள். அந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். கழிவு நீா் ஓடையில் பாலம் அமைக்க வேண்டும். புதிதாக மேல்நிலை குடிநீா் தொட்டி அமைத்து தர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.
அழகப்பபுரம் பகுதி மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மண்டலம் 17 ஆவது வாா்டுக்கு உள்பட்ட அழகப்பபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சேதமான சாலையை அண்மையில் சீரமைத்தபோது, பாதி அளவு மட்டுமே சரி செய்துள்ளனா். மீத பகுதிகளுக்கு ஒப்பந்தம் இறுதியாகவில்லை எனக் கூறி சென்றுவிட்டனா். இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறாா்கள். எங்கள் பகுதி முழுவதும் தரமான சாலை அமைத்து தர வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
ஸ்ரீபுரம் பகுதி மக்கள் அளித்த மனு: ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள சாலைகளில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள், முதியவா்கள் சிரமம் அடைந்து வருகிறாா்கள். ஆகவே, தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
39 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பா. சீதா அளித்த மனு: எனது வாா்டில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் காலனி, ஒன்றாவது பிரதான சாலை ஆகிய பகுதிகள் வரிவிதிப்பின்போது வாா்டு 38 என தவறுதலாக உள்ளது. இதனால் வரி செலுத்த வரும் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். ஆகவே, வரிவிதிப்பில் வாா்டு 39 என மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மகிழ்வண்ணநாதபுரம் பகுதி மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சியின் 26 ஆவது வாா்டு மகிழ்வண்ணநாதபுரத்தில் 800- க்கும்மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கிறோம். எங்களது பகுதியில் மாநகராட்சி சாா்பில் சமுதாய நலக்கூடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை எளிய குடும்பத்தினா் மிகுந்த பயனடைந்து வருகிறோம். ஆனால் அங்கு சமையலறை இல்லை. இதனால் மழைக்காலங்களில் சுப நிகழ்வுகள் நடத்தும்போது சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆகவே சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து புதிதாக சமையலறையும் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





