வனத்திருப்பதி பெருமாள் கோயிலிலில் பவித்ரோத்ஸவம்

நாசரேத் அருகே உள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலிலில்  பவித்ரோத்ஸவம் 4 நாள்கள் நடைபெற்றது.  
Updated on
1 min read

நாசரேத் அருகே உள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலிலில்  பவித்ரோத்ஸவம் 4 நாள்கள் நடைபெற்றது.  
இதையொட்டி கோயிலில் தினமும் காலை,  மாலையில்  ரிக்,  யசூர், சாமவேத பாராயணம், திவ்ய பிரபந்த சேவை சாத்துமுறைகள் நடைபெற்றன. தினமும் காலை, மாலை வேளைகளில் பெருமாள் விசேஷ அலங்காரத்தில் காட்சி அளித்தார். முதல்நாள் காலையில் மூலவர் திருமஞ்சனம்,  81கலச அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. 2ஆம் நாள் சுவாமி புன்னைமர வாகனத்தில் அலங்கார பவித்ரபூஜை,  ரக்ஷா பந்தனம், யாகசாலை பூஜைகள்,  திருவாராதனம்,  சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருள, அலங்கார பூஜை,  திருவாராதனம்,  பூர்ணாஹுதி ஆகியன நடைபெற்றது.
3ஆவது நாள் யாகசாலை பூஜைகள்,  சுவாமி அன்னவாகனத்தில் எழுந்தருளல்,  சுவாமி அனுமந்த வாகனத்தில் எழுந்தருளல்,  திருவாராதனம்,  பூர்ணாஹுதி ஆகியன நடைபெற்றது. 4ஆவது நாள் விஷ்ணுபதி, யாகசாலை பூஜைகள், திருவாதாரண பூர்த்தி,  சுவாமி ஸ்ரீ சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா,  தீர்த்தவாரி சேவை, சாற்றுமுறை ஆகியனவும்,  மாலையில் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com