தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியை விக்னேஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியை முத்துராஜேஸ்வரி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் பி.அனிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பா.ஜோதிகுமார் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில், சமூகப் பணியாளர் பிரகாஷ், ஆக்டிவ் மைண்ட்ஸ் பொறுப்பாளர் சேர்மராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியை கஸ்தூரிபாய் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.