பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பைக்-கார் மோதல்: ஒருவர் சாவு

திருச்செந்தூரில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:36 am IST

திருச்செந்தூரில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார்.
திருச்செந்தூரைச் சேர்ந்தவர் பத்மா (54). அஞ்சலக ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (40) என்பவருடன் பைக்கில் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதுலுதவிக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு செல்வக்குமார் இறந்தார்.
விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.