நல வாரியங்களில் ஓய்வூதியம் பெறும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை ஏப். 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) க. பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்து மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் 2018-2019 ஆம் ஆண்டு நேர்காணலுக்கு தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), எண் 1, விக்டோரியா தெருவில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்யவேண்டும்.
அலுவலகத்துக்கு நேரில் வரும்போது, ஆயுள் சான்று அசல் (சான்றொப்பமிட்ட புகைப்படத்துடன்), குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (நாளது தேதிவரை பதிவு செய்தது), கடந்த ஆண்டு அலுவலகத்தில் கொடுத்த அட்டை, ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக-ஆா்எஸ்எஸ் முயற்சி: தேஜஸ்வி யாதவ்

ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு!
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

